மாண்புமிகு மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் அவர்கள் திருச்சிராப்பள்ளிமாநகராட்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை இன்று (16.03.2025) பொறியாளர்களுடன்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், பல்வகை பயன்பாட்டு வசதிகளுக்கான சேவை மையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.492.55 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் பேருந்து நிறுத்தும் தளம், பயணிகளுக்கான காத்திருப்பு அறை, கழிவறை வசதிகள் மேலும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள், பேருந்து முனையத்தின் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் கூடுதலாக கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் எல்.ஈ.டி திரை அமைக்கும் பணிகள், கூரைப் பகுதியில் எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தல், மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் பிரத்யேக தடங்கள் புல்வெளி பரப்புகள் அமைத்தல் மற்றும் ஒளிரும் போக்குவரத்து எச்சரிக்கை பலகைகள் அமைக்கும் பணிகள் மற்றும் ஆம்னி தனியார் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளின் தற்போதைய
நிலை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து இப்பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் மேலும் எதிர்காலத்தில் கூடுதல் பயணிகளை கையாளும் தமிழ்நாட்டின் மத்திய பகுதியாக திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமையவுள்ளதால் தேவைப்படும் இடங்களில் கூடுதலாக கழிப்பிட வசதிகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் அமைத்து தருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விரைந்து இப்பணிகளை முடிப்பதற்கும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் நகர பொறியாளர் திரு. பி. சிவபாதம், செயற்பொறியாளர் திரு. கே. எஸ். பாலசுப்பிரமணியன்,உதவி ஆணையர் திரு. ச.நா.சண்முகம், உதவி செயற்பொறியாளர் திரு. வேல்முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments