Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தேசிய பேரிடர் மீட்பு படை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாவட்டத்தில் என்டிஆர்எஃப் 10 நாட்கள் பரிச்சயப்பணியை நடத்த உள்ளதுதேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) சார்பாக, அணித் தளபதி SI ரத்னகுமார் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் 10 நாள் பரிச்சயப்பணி (FAMEX) நடைபெறவுள்ளது.

இப்பணியின் நோக்கம், மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு பணிகளில் உள்ள நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை உறுதி செய்வது மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இந்நிலையில், NDRF குழு முக்கிய பேரிடர் அபாயம் உள்ள ரசாயன தொழிற்சாலைகள், பாதிப்பிற்குட்பட்ட பகுதிகள், மற்றும் மருத்துவமனைகள் போன்ற இடங்களை பார்வையிட்டு, பேரிடர் குறித்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்.

மேலும், தீயணைப்பு துறை, வனத்துறை, சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பல்வேறு பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகளை மேற்கொள்வதும் இப்பணியின் ஒரு பகுதியாகும்.பொதுமக்களின் பாதுகாப்பையும், பேரிடர் காலங்களில் தீர்வுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த பரிச்சயப்பணி திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள:

SI ரத்னகுமார்

அணித் தளபதி, NDRF

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *