Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அம்பேத்கர் பிறந்த நாள் திருச்சி மாநகராட்சி வார்டுகளில் சபா கூட்டம்

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று 14.04.2025ம் தேதி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது . 

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 5 வது மண்டலத்துக்கு உட்பட்ட 27 வது வார்டு பென்சினர் தெரு ,கோச துவக்கப்பள்ளியில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவா்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது..

இதில் பொது மக்களிடமிருந்து குறைகளை கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில் ,பென்சினர் தெரு, பள்ளிவாசல் பகுதி பொதுமக்கள், சங்கீதபுரம் , சவேரியார் கோவில் தெரு , மல்லிகைபுரம் , ஜெனரல் பஜார் , பெருமாள் கோவில் தெரு ,விஷப்பன் நாயக்கன் பேட்டை, ெரங்கநாதபுரம் தெரு, மூலைக் கொல்லை, தென்னூர், தெருபட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மாநகர மேயரிடம் அளித்தனர் . 

மேலும் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என மேயர் அவர்கள் தெரிவித்தார் .

முன்னதாக மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் 27 வது வார்டு பகுதிகளுக்கு முடிவுற்ற திட்ட பணிகளையும், நலத்திட்டங்களையும் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதி சபா கூட்டம் நடைபெற்று

பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். தகுதியுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *