Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக மனு

திருச்சி மேற்கு சட்டமன்ற பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 10-ல் கடந்த சில தினங்களாக குடி தண்ணீரில் சாக்கடை நீர் கலந்ததாக ஒரு சிறுமி உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். நேற்றைய தினம் அந்தப் பகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேரில் சென்று

ஆய்வு செய்ததின் அடிப்படையில் திருச்சி 10 வது வார்டு மக்களின் கோரிக்கையாக மனுவினை தயார் செய்து இன்று திருச்சி மாநகர மேயர் அவர்களிடமும், மாநகராட்சி ஆணையர் அவர்களிடமும் மேற்கு பகுதி குழு செயலாளர் இரா.சுரேஷ் முத்துச்சாமி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

மனுவை திருச்சி மாநகராட்சி மேயரும், மாநகராட்சி ஆணையரும் தாங்கள் கொடுத்த மனு மீது இன்னும் 20 தினங்களில் 24 மணி நேரமும் தூய்மையான குடிநீரும், நாளை முதல் உறையூர் பகுதிகளில் குடி தண்ணீர் சீரான முறையில் கிடைக்கும் எனவும் பாதாள சாக்கடை திட்டங்களை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வருமென உறுதியளித்தார்கள். இந்த மனு அளிப்பு நிகழ்ச்சியில் சி.பி.ஐ மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா, மாதர் சங்க மேற்கு பகுதி செயலாளர்

 M.சுமதி தலைவர் க.ஆயிஷா மேற்கு பகுதி இளைஞர் பெருமன்ற தலைவர் N.S.பாட்ஷா, இளைஞர் பெருமன்ற மேற்குப் பகுதி செயலாளர் K.தர்மராஜன் பகுதி குழு நிர்வாகிகள் B.ரவீந்திரன், R.சரண் சிங் ,S.முரளி, R நாகராஜ், R.ஆனந்தன், தில்லை K.நாகராஜ், D.அஜீத் குமார், ஜோதிவேல், ஜோயல், தீபிக் மற்றும் 15க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *