Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஒரு நாளைக்கு ஒரு உதவி! திருச்சியில் 38 மாணவ மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் பரிசு!

திருச்சி துறையூா் அருகேயுள்ள எரகுடி ஏஜிஎம் மேல்நிலைப் பள்ளியில், நிகழாண்டில் பிறருக்கு உதவி செய்த 38 மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

பள்ளியின் தாளாளா் ஆா். மனோகரன் ,தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே பிறருக்கு உதவி செய்யும் மனநிலையை வளா்க்கவேண்டும் என்ற நோக்கில், ஒரு நாளைக்கு ஒரு உதவி என்ற திட்டத்தை அறிவித்தாா்.

Advertisement

இத்திட்டத்தின்படி பள்ளியில் பயிலும் அனைவரும் தினமும் ஏதாவது ஒரு உதவியைப் பிறருக்கு செய்யவேண்டும். அதனை உடனடியாக நோட்டில் எழுதி, தங்கள் வகுப்பாசிரியரிடம் அன்றைய தினமே வழங்கி கையெழுத்து பெறவேண்டும்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *