Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பிரபல ரவுடி கொலை- முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட்ட ஐந்து பேர் தலை மறைவு

திருச்சி அருகே உள்ள கிளிக்கூட்டில் பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்த வழக்கில்முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 பேரை நம்பர் ஒன் டோல்கேட் போலீசார் தேடி வருகின்றனர்

திருச்சி அருகே உள்ள கிளிக்கூடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் அசோக்குமார் (40) இவன் மீது நம்பர் ஒன் டோல்கேட் காவல் நிலையத்தில் ரவுடி வழக்கு உள்ளது. இவன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு முன் பகை காரணமாக பிரகாஷ் என்பவனை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கும் நம்பர் ஒன் டோல்கேட் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கிளிக்கூடு கிராமத்தில் கடந்த 23ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை அசோக்கால் கொலை செய்யப்பட்ட பிரகாஷ் என்பவனின் நினைவாக நம்பர் ஒன்பாய்ஸ் குழு என்ற பெயரில் கபடி போட்டி நடத்தியுள்ளனர்.இந்நிலையில் 29 ஆம் தேதியான நேற்று அசோக் தனது நண்களுடன் அருவாளுடன் வந்து கபடி போட்டியா நடத்துகிறீர்கள் என கேட்டு ஊர் மக்களை மிரட்டியதோடு

அதே பகுதியை சேர்ந்தமருதை மகன் சின்ன அப்பு (எ) பிரகாஷ் என்பவரை அசோக் தரப்பினர் தாக்கி உள்ளனர். இச்சம்பவம் கபடி போட்டியை நடத்திய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் மகன் பிரவீன் ( எ) சின்னத்தம்பி என்பவரிடம் அவனது நண்பர்கள் கூறியுள்ளனர்.இந்நிலையில் அசோக் பாலகிருஷ்ணன் வீட்டின் முன்பு சென்று அருவாளுடன் நின்று தகாத வார்த்தையால் பேசி வம்புக்கு இழுத்ததாகவும்

அப்பொழுது ஏற்கனவே அசோக் தரப்பினர் பிரகாஷ்  தாக்கியதால் கோபத்தை சின்னதம்பி இருந்த நிலையில் அசோக் வீடு தேடி வந்து வம்பு இழுத்ததால் ஆத்திரமடைந்தசின்னத்தம்பி அண்ணன் வேலாயுதம் (எ) பிரபு கட்டிட காண்ட்ராக்டர்வேலை செய்து வருகிறான், அவரது தம்பி சின்னத்தம்பி இவர் எல்எல்பி முடித்துவிட்டு நீதிமன்றத்தில் பயிற்சிவழக்கறிஞராக உள்ளான்.

அவரது நண்பனாக மோகன் இவன் விவசாய வேலை பார்த்து வருகிறான். சின்ன அப்பு (எ) பிரகாஷ் ஆட்டோ ஓட்டி வருவதாகவும், சின்ன தம்பி தந்தை பாலகிருஷ்ணன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய 5 பேரும் சேர்ந்து அசோக்கை வெட்டிராகவும் கூறப்படுகிறது.இதில் சம்பவ இடத்திலேயே அசோக் பறிதாபமாக உயிரிழந்தான் இச்சம்பவம் குறித்து நபர்ஒன் டோல்கேட் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அசோக்கின்

 உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சபவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதோடு அசோக்கை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *