Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வீட்டை பூட்டி விட்டு பழனி கோவிலுக்கு சென்று திரும்பிய குடும்பத்தினருக்கு அதிர்ச்சி- வீட்டிற்குள் நான்கு திருடர்கள்

திருச்சி கூனி பஜார் அருகே பழனி கோயிலுக்கு வீட்டை பூட்டி விட்டு சென்ற குடும்பத்தினர் மீண்டும் வீட்டுக்கு வந்த பொழுது உள்ளே நான்கு திருடர்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் முன்புறம் பின்புறம் உள்ள கதவுகளை மூடினர். மூன்று திருடர்களும் தப்பி ஓடினர். ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார்.

 முக்கியமாக அப்பகுதி மாமன்ற உறுப்பினர் கணவர் கருப்பையா நேரடியாக வந்து திருடனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். பாலக்கரை காவல் நிலைய போலீசார் அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒருநாள் வீட்டை பூட்டிவிட்டு சென்று மறுநாள் இரவு வரும்பொழுது

வீட்டிற்குள் நான்கு திருடர்கள் இருந்ததை அந்த குடும்பத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். நகை, பணம் கொள்ளை போனதாக தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். 25 பவுன் தங்க நகை, 20000 ரூபாய் ரொக்கம், மற்றும் அரை கிலோ வெள்ளி ஆகியவற்றை காணவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

எப்பொழுதும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஏழு மணி அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *