நீதிக் கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது
திருஉருவ சிலைக்கு அரசு சார்பில் இன்று (01.06.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மா பிரதீப் குமார் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வே சரவணன், திருச்சிராப்பள்ளி வருவாய்
கோட்டாட்சியர் அருள்,உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சுதாகர், மேற்கு வட்டாட்சியர் ச. பிரகாஷ்,மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம்,அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments