திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் இன்று (12.06.2025) குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன்-12 ஆம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (12.06.2025) திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு “குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வுகளில், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. தீபி சனு , தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லீலாவதி,
உதவி ஆணையர் தங்கராசு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலர்கள், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் எடுத்த உறுதி மொழி:
“இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஒரு போதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும்
குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments