Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பால் பொருட்கள் வாங்க சிரமப்படுகிறீர்களா? ஆன்லைனில் புக்கிங் செய்தால் போதும் இலவசமாக பால் உங்கள் வீட்டிற்கே வந்து விடும்!! திருச்சியில் புதிய அறிமுகம்!!

கொரோனா நோய் தாக்கத்தால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் பலர் இன்னும் திண்டாடி வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் உபயோகிக்க கூடிய அத்தியாவசிய பொருளான பால் கூட சில சமயங்களில் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதற்கு தீர்வு அளிக்கும் வகையில் திருச்சியின் 25 வருட பாரம்பரியமிக்க விஜய் பால் நிறுவனம் சார்பில் இலவசமாக பால்,தயிர், மோர், பன்னீர், நெய், வெண்ணெய், இட்லி மாவு, தோசை மாவு என பல பொருள்களை ஆன்லைன் மூலம் தேர்வு செய்தால் உங்கள் வீட்டிற்கு இலவச டோர் டெலிவரியுடன் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளனர்.

மதியம் 3 மணிக்குள் ஆர்டர்கள் செய்துவிட்டால் அன்றே வீட்டில் வந்து வழங்கப்படும். மூன்று மணிக்கு பிறகு வரும் ஆர்டர்கள் அடுத்த நாள் வழங்கப்படும். இதில் குறைந்தபட்சம் 200 ரூபாய்க்கு மேல் வாங்க வேண்டும். பால், பன்னீர், நெய், இட்லி மாவு என ஒவ்வொரு கடைகளுக்கு ஊரடங்கு காலத்தில் அலைவதை விட ஒரே தடவையாக தங்களுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக ஆன்லைனில் ஆர்டர் செய்துவிடலாம்.

இன்னுமா யோசிக்கிறீங்க? ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பாக வீட்டிலிருந்து அத்தியாவசிய பொருளான பாலை பெற விஜய் பால் நிறுவனத்தின் கீழே உள்ள லிங்க் மூலம் இப்போதே ஆர்டர் கொடுங்கள்!!

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *