Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தமிழக அரசு அறிவிக்கும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும்!!

கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தால் நாளை முதல் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.ஆனால் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் எதுவும் நடைமுறைக்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் புதிய தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். இதற்கென மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்துள்ளது. அந்தக் குழு தன்னுடைய முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதன் ஆலோசனைகளை முதலமைச்சரிடம் தெரிவிக்க உள்ளது.

Advertisement

இந்தக் குழுவில் ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுக்க உள்ளார். எனவே தமிழக அரசு அறிவிக்கும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று அரசு தெரிவித்துள்ளது.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *