Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

2021 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நாளை  நடைபெறுகிறது. அதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள
9 சட்டமன்ற தொகுதிகளிலும் 3,292 வாக்குச்சாவடிகளும் 1,147 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுக்ளது. மாவட்டத்தில் 11,35,780 ஆண் வாக்காளர்களும், 12,02,728 பெண் வாக்காளர்களும், 237  மாற்று பாலினத்தவர் என  மொத்தம் 23,38,745 வாக்காளர்கள் உள்ளனர். 156 பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது. 

தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்தில் 5,688 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், 3,950 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரமும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வி.வி.பே.ட் இயந்திரம் 4,247 தயார் நிலையில் இருந்தன. 

மேலும் வாக்குச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கான முக கவசம், கையுறை உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள், வாக்குப்பதிவு மையத்திற்கு தேவையான எழுதுகோல், காகிதம், மை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அந்த அந்த வாக்குச்சவடி மையங்களுக்கு அனுப்பும் பணி இன்று தொடங்கியது.

ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பும் பணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அதிகாரிகளிடம் அந்த பணிகள் குறித்து கேட்டறிந்தார். இன்று மாலைக்குள் அனைத்து இயந்திரங்களும் குறிப்பிட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *