கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி மாநகரின் அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட 20 இடங்களில் ( 8 சோதனைச்சாவடிகள் மற்றும் 12 இடங்களில் ) சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு முகக்கவசம் மற்றும் அறிவுரைகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
மேலும் முகக்கவசமின்றி சுற்றித் திரிந்த 1600 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் தொகை சுமார் ரூபாய் 2,64,600 விதிக்கப்பட்டது. தனிநபர் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் செயல்பட்டவர்கள் மீது 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 36,500 அபராதம் விதிக்கப்பட்டது.
இனிவரும் காலங்களில் கொரோனோ நோய்த்தொற்றைக் குறைப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments