Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை

No image available

கொரோனா தொற்று 2 அலை காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் டாஸ்மாக்கும் அடங்கும். இன்று முதல் மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும். மாலை 4 மணி வரை டோக்கன்கள் வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்ததுள்ளது.

இந்நிலையில் இம்மாதம் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகாவீர் ஜெயந்தி நாள் மற்றும் அடுத்த மாதம் மே 1-ந் தேதி உழைப்பாளர் தினம் மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் அன்று திருச்சியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.

சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *