Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் அடக்கம்!

No image available

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த, ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண்மணி இன்று உயிரிழந்தார்.

நீரிழிவு நோயினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் தற்போது உயிரிழந்துள்ளார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது உடலை உரிய பாதுகாப்புடன் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள நானா மூனா பள்ளிவாசலில் உள்ள அடக்கம் செய்யும் இடத்தில் அடக்கம் செய்தனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *