Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி பொன்மலை பணிமனை பணியாளர்களுக்கு பிராணாயாம மூச்சுப்பயிற்சி

பொன்மலை பணிமனையில் கோவிட் 19  பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு ஏதுவாக ஆரோக்கியமான உடலையும் மனதையும் தயார் நிலையில் வைத்திடும் வகையில் அனைத்து பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சுவாச பயிற்சிகளுடன் கூடிய பிராணாயமா  மூச்சுப் பயிற்சி ஏப்ரல் 24 முதல் துவங்கப்பட்டுள்ளது. யோகாசனங்களில் ஏற்கனவே பயிற்சி பெற்ற மேற்பார்வையாளர்கள் இந்த பயிற்சியை வழங்கி வருகிறார்கள்.

 பயிற்சியின் தொடக்கத்தில் புகழ்பெற்ற யோகா நிபுணர்களால் நிகழ்த்தப்பட்ட பிராணயாம பயிற்சி முறைகள் ஒளிபரப்பப்பட்டதை  மேற்கொள்வதன் மூலம் பெறப்படும் நன்மைகள் விளக்கப்படுகின்றன மூன்று நிலைகள் கொண்ட நாடி ஸோடன்,கபல்பதி மற்றும் பாரமாரி  பிராணயாம வகை மூச்சுப் பயிற்சி அளிக்கப்படுகின்றன மேலும் இந்த சுவாச பயிற்சியை மேற்கொள்வதால்  முழு உடலும் புத்துணர்ச்சி பெறுகிறது.
 மேலும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை தணிப்பது, சைனஸ்க்கு சுத்திகரிப்பு இருமல் கோளாறுகளை சமாளிக்கும் திறமை சுவாசக்காற்று  திறன் அதிகரித்தல் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை அளிக்கும் பயன்பாடுகள் போன்றவற்றை எளிதில் பெற முடியும் இந்த எளிய மக்கள் தற்போதைய தொற்று நோய் பரவலை தடுப்பதில் மான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன .

 பயிற்சி மையத்தில் நடைபெறும் ஒவ்வொரு அமர்விலும் 70 முதல் 80 விருப்பமுள்ள ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 மேற்பார்வையாளர்கள் மற்றும் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டன இதுவரை 400 ஊழியர்கள் இந்த பயிற்சி பட்டறை மூலம் பயன்பெற்றுள்ளனர் ஒவ்வொரு பயிற்சி நிறைவேறும் பங்கேற்பாளர்களுக்கு மருத்துவ குணம் நிறைந்த  சுக்குமல்லி காப்பி வழங்கப்படுகிறது.
 பொன்மலை பணிமனை  மார்ச் 3 முதல் மார்ச் 8 வரை  வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மூடப்படட்டுள்ளது.பணிமனை திறப்புக்குப்பின் 
 மீண்டும் பிராணயாம பயிற்சி தொடர்ந்து வழங்கப்பட இருக்கிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *