Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

விமானம் மூலம் திருச்சி வந்த 302 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை! ஆட்சியர் நேரில் ஆய்வு!!

No image available

திருச்சி விமான நிலையத்திற்கு துபாய் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம்170 நபர்கள், பெங்களூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு 72 பயணிகளும், சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு 60 பயணிகளும் இண்டிகோ விமானம் மூலம் திருச்சிராப்பள்ளிக்கு வருகை புரிந்த 302 நபர்கள் வருகைபுரிந்தனர்.

இவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி முன்னெச்சரிக்கையாக சுகாதாரத் துறையின் மூலம் விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்ததை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு நேற்று ( 03/6/ 2020) நேரில் பார்வையிட்டார்.

மேலும் திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் என்.விஸ்வநாதன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி, உதவி ஆட்சியர் பயிற்சி சித்ரா விஜயன் ,துணை ஆட்சியர் பயிற்சி சரண்யா மற்றும் பலர் உடன் உள்ளனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *