Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பெண் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை

கீரனூர் போலீஸ் ஸ்டேசனில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தவர் கீதா ( 43 ). இவர் திருச்சி கே.கே நகர் ஐயப்பன் நகர் கட்டபொம்மன் தெருவில் கணவர் வடிவேல், 9 மற்றும் 21 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களாக தூக்க மாத்திரை அதிக அளவு எடுத்துக் கொண்டதாகவும் அடிக்கடி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கே.கே.நகர் போலீசார் கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *