Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாநகரில் சுற்றித்திரிந்த 6041 வாகனங்கள் பறிமுதல் முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து ரூபாய் 27,20,900 அபராதம் வசூல்

திருச்சி மாநகரில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் நேற்று வரை திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் அரசின் தடை உத்தரவை மீறி முக கவசம் அணியாத நபர்கள் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நபர்கள் என 12,494 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்குகள் மூலம் 27 லட்சத்து 20 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

நேற்று மட்டும் முக கவசம் அணியாமல் ஊரடங்கு மீறியதாக 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூபாய் 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நாள் முதல் நேற்று வரை விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த 69 கார்கள், 182 ஆட்டோக்கள், 5756 வாகனங்கள் என மொத்தம் 6071 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 468 இருசக்கர வாகனங்கள், 11 ஆட்டோக்கள் மற்றும் 69 கார்கள் என மொத்தம் 483 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் கேட்டுக்கொண்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *