Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கணவர் ஏமாற்றி விட்டதாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பெண்!!

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூரில் வசிப்பவர் விஷ்ணு. இவருடைய மனைவி நீலவேணி என்பவர் வீட்டில் பெட்ரூமில் இன்று காலை தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி பற்ற வைத்துக் கொண்டு இறந்துள்ளார்.

இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தான் திருமணம் நடந்துள்ளதை நிலையில், வீட்டில் கணவர், மாமனார் குருமூர்த்தி, மாமியார் வாணி, 4 பேரும் வசித்து வந்துள்ளனர். கணவரும், மாமனாரும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக திருச்சி ஏர்போட்டை சேர்ந்த லாவண்யா என்பவர் முன்கூட்டியே விஷ்ணுவுக்கும் தனக்கும் திருமணம் ஆகிவிட்டதாக கூறி வந்துள்ளார். பிறகு லாவண்யாவை விரட்டிவிட்டதாக கூறுகின்றனர். ஆகையால் கணவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார் என்ற விரக்தியில் இன்று மண்ணெண்ணை ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு இறந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
திருமணமாகி 8 மாதங்களிலேயே இப்பெண் தீ குளித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
 வருகின்றனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *