Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

125.64 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிசன் இன்று திருச்சிக்கு வந்தடைந்தது

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்காக பிற மாநிலங்களில் இருந்து ஆக்சிசன் சிறப்பு ரயில்கள் மூலம் கொண்டு வரப்பட்டு வருகிறது. இதற்காக இரண்டு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள்  வெளிமாநிலங்களில் முகாமிட்டு தமிழகத்திற்கு ஆக்சிசனை அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து இருந்து 6 கண்டெய்னர்களில் 125.64 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிசன் திருச்சிக்கு வந்தடைந்தது. திருச்சி வந்த மருத்துவ ஆக்சிஜன் கண்டெய்னர் லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.

இதுவரை ரயில்கள் மூலம் ஆக்சிசன் மொத்தம் 4781.22 மெட்ரிக் டன் தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *