Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஶ்ரீரங்கம் கோயிலில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தீ விபத்து ஏற்பட்டால் எப்படி விழிப்புடன் செயல்பட்டு தீயை அணைப்பது குறித்து திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய முன்னனி தீயணைப்பு வீரர் பெரியண்னன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கமல்சிங், பிரபு ஆகியோர் செய்து காண்பித்தனர்.

அப்போது கோயில் அன்னதான சமையல் பணியாளர்கள், மடப்பள்ளி பணியாளர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் அனைத்து கோயில் பணியாளர்களுக்கும் தீ தடுப்பு குறித்து ஒத்திகை நிகழ்ச்சி செய்து காட்டி அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் கோயில் இணை ஆணையர் திரு செ.மாரிமுத்து, உதவி ஆணையர் கு.கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், மேலாளர் உமா மற்றும் அனைத்து திருக்கோயில் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *