திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நரசிம்மா நசீமா (74). இவருடைய கணவர் அப்துல் மாலிக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் நசீமா கடந்த 2ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ராமலிங்க நகரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தார்.
அப்போது இவரது வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 10 லட்சம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்டனர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நசீமாவின் போலீசார் ஒப்படைத்தனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW
Comments