Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திமுக முன்னாள் அமைச்சர் காலமானார்

திருச்சி மாவட்டம் மருங்காபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், இந்து சமய அறநிலை துறை அமைச்சராகவும்,  கால்நடை துறை அமைச்சராகவும் திமுக ஆட்சிக் காலத்தில் பணியாற்றிய புலவர் செங்குட்டுவன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

1996 ஆம் ஆண்டு மருங்காபுரி சட்டமன்ற தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் செங்குட்டுவன். இவர் அறநிலையத்துறை மற்றும் கால்நடை துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். 1996 லிருந்து 2001 வரை அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது 2006ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கோவிட் தொற்று காலத்தில் வழக்கு நடைபெறாத நிலையில் இருந்தது. வழக்கை விரைவாக முடிக்க செங்குட்டுவன் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திருச்சி முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கின் விசாரணையில் மொத்தம் 150 சாட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

தற்போது 75க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரணை முடிவடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .16.02.2021 இவ்வழக்கிற்காக திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் நீதிமன்றத்தில் ஆஜரானார். குடலிறக்க நோயால் அவதிப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இன்று காலை வீடு திரும்பிய அவர் மரணமடைந்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *