Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் போதை மாத்திரைகள் பறிமுதல் காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை

 திருச்சி மலைக்கோட்டை பகுதியில் 26 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் .திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் இந்த மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர். இந்த மாத்திரைகள் அனைத்தும் போதை பொருளாக பயன்படுத்த இருந்தது.  சமீபகாலமாக திருச்சியில் மாத்திரைகளை தூளாக்கி அதனை ஊசி மூலம் உடலில் ஏற்றிக் கொள்ளும் பழக்கம் அதிகமானதால் மாநகர காவல் ஆணையர் தனிப்படை அமைத்து பிடித்துள்ளார்.5 பேரிடம் கோட்டை காவல் நிலையத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
 ஜீவா நகர் குடோனுக்கு மருந்து விற்பனை பிரதிநிதி இந்த மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வைத்து விற்பனை செய்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த போதை மாத்திரை விவகாரத்தில் வேறு யார் யாரெல்லாம் தொடர்பில் உள்ளார்கள் என்பதை திருச்சி மாநகர துணை ஆணையர் சக்திவேல் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *