Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் காவிரித்தாய்க்கு ஆடிச்சீர் வழங்கும் வைபவம்

ஆண்டுதோறும் ஆடிமாதம் 18-ம் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் நம்பெருமாள் தனது தங்கையான காவிரி தாய்க்கு சீர்கொடுப்பது வழக்கம். ரங்கநாதரின் தங்கையாக காவிரி அன்னை கருதப்படுகிறாள். அதன்படி ஆடி 18-ம் தேதியன்று ரங்கநாதர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திலுள்ள படித்துறைக்கு காலையில் எழுந்தருள்வார். 

அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். மாலையில் புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை பாக்கு, பழங்கள் முதலிய சீர்வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து அம்மா மண்டபம் படித்துறைக்குக் கொண்டு வருவர். பெருமாள் முன்னிலையில் வைத்து தீபாராதனை செய்து பின்பு அவற்றை காவிரியில் மிதக்கவிடுவர்.

இந்தக் காட்சியை தரிசித்தால் உணவும், உடையும் செழிப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம். கொரோனா வைரஸ் தொற்றால் நேற்றும் (02.08.2021) இன்றும் (03.08.2021) கோவில் நடைசாற்றப்பட்டதுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிமறுக்கப்பட்டதால் அம்மாமண்டபத்திற்கு நம்பெருமாள் எழுந்தருள்வது தடைபட்டது.

அதனால் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பாடாகி மாலை ரெங்கவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அலங்கார அமுது செய்து பின்னர் காவிரித்தாய்க்கு பட்டுவஸ்திரம், மாங்கல்யம், மஞ்சள், பூ உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் உள்ளடக்கிய ஆடிச்சீர் அளிக்கும் வைபவம் நடைபெற்றது.

மங்கலப்பொருட்கள் யாவும் ஸ்ரீரங்கம் கோவில் பட்டாச்சார்யார்களால் சாமரங்கள் வீசியபடி தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பின்னர் அம்மாமண்டபத்தில் கரை புரண்டு ஓடும் காவிரித்தாய்க்கு சீராக அளிக்கப்பட்டது.  இந்நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஆடிப்பெருக்கு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரிக் கரையில் கூடுவது வழக்கம். ஆனால் வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடமாக பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *