திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கலப்பட டீத்தூள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது.
இதனைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமையில் அதிகாரிகள் தென்னூர் பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய கலப்பட டீத்தூள் 72 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் 5 சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments