Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 3 அடி நல்ல பாம்பு – பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகம் தேரோடும் வீதியில் ஆடு, கோழிகளை காணிக்கைகளாக செலுத்தும் இடத்தில் 3 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதுகுறித்து சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

பின்னர் விரைந்து வந்த சமயபுரம் தீயணைப்பு  நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் வீரர்கள் விஜயகுமார், ஜீவா, அலெக்சாண்டர், சதீஷ்குமார்,பெரியசாமி, உள்ளிட்ட வீரர்கள் விரைந்து வந்து சமயபுரம் கோயில் வளாகத்தில் காணிக்கை செலுத்தும் இடத்தில் புகுந்த நல்ல பாம்பை பிடிக்க தீவிர முயற்சி கொண்டனர்.

ஆனால் பாம்பு அங்கும் இங்கும் போக்கு காட்டியது. சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்குப்பின் நல்ல பாம்பை பத்திரமாக பிடித்தனர். பின்னர் பாம்பை சாக்கு பையில் அடைத்து வயல்வெளி காட்டுப்பகுதியில் பாம்பை பத்திரமாக விட்டனர்.

செவ்வாய் கிழமையான இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நல்ல பாம்பு வந்ததை அறிந்த பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சிலர் பாம்பு காண ஆவலுடன் வேடிக்கை பார்த்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *