திருச்சி மாவட்டம் அல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயேந்திரன். இவரது தம்பிகள் உதயகுமார், சத்தியகுமார், உதயகுமார். இந்நிலையில் வெளிநாடு சென்று விட்டு திரும்பிய பொழுது தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தையும், காரையும் விஜயேந்திரன் அபகரித்ததாக ஜீயபுரம் காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் கொடுத்தார்.
இதனை அடுத்து விஜயயேந்திரன் உதயகுமார், சத்தியகுமார் மூவரும் வாக்குவாதம் முற்றி அடிதடியில் ஈடுபட்டனர். ஒருவரை மீது ஒருவர் மாறிமாறி புகார் கொடுத்ததில், தற்பொழுது ஊராட்சி மன்ற தலைவர் விஜயேந்திரன் மீதும் அவரது தம்பிகள் மீதும் ஜீயபுரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments