Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சேறும், சகதியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

திருச்சி கே.கே.நகர் செல்லும் வழியில் ரெங்கா நகர் குறுக்கு தெருவில் சமீபத்தில் பெய்த சிறிய மழையினால் சாலைகள் சேதம் அடைந்துள்ளது. தொடர்ந்து மழைக்காலம் என்பதால் இன்னும் சில தினங்கள் தொடர் மழை பெய்யும் எனில் இப் பகுதிமுழுமையாய் சேதமடையும் மாநகராட்சி நிர்வாகம் கோடை காலங்களில் சாலைகளை சீரமைக்கும் பணிகளை செய்ய தவறவிடுகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர் 

நடந்து செல்பவர்களும், இருசக்கர நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். நோய் தொற்று பரவும் காலத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சாலைகளில் சீரமைத்து தர மாநகராட்சி வாட்ஸப் எண்ணிற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதி வாசிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *