Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நாளை (01.09.2021) பள்ளி, கல்லூரி திறப்பது குறித்து ABVP அறிக்கை

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது தற்போது உள்ள சூழ்நிலையில் சற்று குறைந்து வரும் நிலையில் நாளை முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. ABVP தென் தமிழக மாநில செயலாளர் சுசீலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு மத்தியில் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள செப்டம்பர் 1ஆம் தேதி அனைத்து பள்ளி கல்லூரிகளும் இயங்கும் என்ற அறிவிப்பை ABVP தேசிய மாணவர் அமைப்பு வரவேற்கிறது. மேலும் சில கோரிக்கைகளை ABVP தமிழக அரசிற்கு முன்வைக்கிறது.

சமூக இடைவெளி மற்றும் கைகளை சுத்தம் செய்வதை சரியான முறையில் கண்காணிக்கப்பட வேண்டும். அதற்காக ஒரு அலுவலரை நியமிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஒரு மருத்துவ அலுவலரை நியமிக்க வேண்டும். பள்ளியில் உள்ள உள்ளே செல்லும் போதும் வெளியே செல்லும் போதும் மருத்துவ பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ABVP தேசிய மாணவர் அமைப்பு வலியுறுத்துகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *