Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருவானைக்காவலில் வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவரிடம் அடித்து பணம் பறிப்பு – கொள்ளையர்கள் தப்பியோடிய சிசிடிவி காட்சிகள்

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நடுக்கொண்டையம்பேட்டை மல்லிகைபுரம் பகுதியில் வசிப்பவர் ரவிந்திரன். இவரது சகோதரர் மனோகரன் (65) வழக்கம்போல் வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்கள் மனோகரனை அடித்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

மனோகரன் அவரை பிடிக்க சென்ற போது லாரியில் தள்ளியதால் படுகாயமடைந்த மனோகரன் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று சிகிச்சை பலனளிக்காமல் மனோகரன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து முதியவரை தாக்கி பணம் பறிப்பில் ஈடுபட்டு தப்பியோடிய கொள்ளையர்கள் குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகள் போலீசார் கொண்டு தேடி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *