Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொன்னணியாறு அணையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், வடகிழக்குப் பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதைத் தொடர்ந்து, வையம்பட்டி பொன்னணியாறு அணையில் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு நேற்று (29.09.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், திருச்சிராப்பள்ளி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப் பதிவுப் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதை மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கருங்குளம், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன்சங்கம் அலுவலகத்தையும், பதிவேடுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், வையம்பட்டி கருங்குளம், நியாயவிலைக்கடையில் அரிசி மற்றும் கோதுமையின் தரத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப் பதிவுப் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதை மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

இந்நிகழ்வுகளின் போது, ​​பொதுப்பணித்துறை அலுவலர்கள், வயம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு அண்ணாதுரை, ரேவதி, மருங்காபுரி வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீனிவாசபெருமாள், அழகுமணி உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *