Saturday, October 11, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்: 484 பேருக்கு வேலைவாய்ப்பு:

வீ ஆர் யுவர் வாய்ஸ் மற்றும் DDU-GKY, புனித ஜோசப் கல்லூரி இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான  வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது.இவர்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல…
சமுகத்தை மாற்றும் திறனாளிகள்…
தன்னிடம் உள்ள குறையை பார்ப்பவன் உலகை வெறுக்கிறான்… அதை உடைத்து
எழுபனே உலகை திரும்பி பார்க்க வைக்கிறான்.

கடந்த ஐந்து வருடமாக நடைபெறும் வீ ஆர் யுவர் வாய்ஸ் வேலைவாய்ப்பு முகாமின் பத்தாவது நிகழ்வு இது. இந்நிகழ்ச்சியில் 2500 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.திருச்சியை சேர்ந்த 75 நிறுவனங்கள் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில் 484 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஐ.டி, ஐடிஇஎஸ் ப்ரோ கம்பெனிகள், வங்கிகள், முன்னணி ஹோட்டல்கள், தயாரிப்பு நிறுவனங்கள், பள்ளிகள் போன்ற முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்நிகழ்வை திருச்சி சாரதாஸ்,ஹலோஎப்.எம்,
வீடார்ட்,இன்அவுட் ஸ்டியோஸ் ,டிஎன்யுஎல்எம்,நாஸ்காம், ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *