Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைப்பதற்கான இடத்தினை அமைச்சர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், முதுவத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைப்பதற்கான இடத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (16.10.2021) நேரில் பார்வையிட்டார்.

அதில் மாணவர்களுக்கான தற்காலிக வகுப்பறைகள் கட்டடம் கட்டுவது தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, இந்தக் கல்லூரிக்கான கட்டடம் கட்டப்படும் வரை, கல்லக்குடி டால்மியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இக்கல்லூரி தற்காலிக வகுப்பறைகள செயல்படுவது தொடர்பாக, இப்பள்ளி வளாகத்தினையும், கல்லூரி செயல்பாட்டிற்கான பள்ளி வகுப்பறைகளையும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்திரபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன், ஒன்றியக்குழுத் தலைவர் ரசியா கோல்டன் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *