Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தூங்கி கொண்டிருந்தவர் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (55). இவர் கடந்த 16ம் தேதி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவை காண ஆம்னி காரில் வந்துள்ளார். அப்போது சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகில் ஆம்னி காரை நிறுத்திவிட்டு அதில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து விட்டு தப்பிச் சென்றனர். பின்னர் செந்தில் எழுந்து பார்த்தபோது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சடைந்தார். பின்னர் இது குறித்து சமயபுரம் காவல்நிலையத்தில் செந்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே சமயபுரம் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த மூதாட்டி ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அவரது சுருக்கு பையை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *