Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரில், நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, பொங்கல் வைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதை இக்கிராம மக்கள் பராம்பரிய வழக்கமாக வைத்துள்ளனர்.

அதன்படி, தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு பெரிய சூரியூரில் துவங்குகிறது. உச்சநீதிமன்ற வழிபாட்டுதலின்படி, வாடிவாசல், மேடை மற்றும் ஜல்லிக்கட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மைதானத்துக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காளைகளால் ஆபத்து ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 800 ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்கின்றன. மொத்தம், 8 சுற்றுகளாக நடைபெறும் போட்டியில், 500 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர்.

சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக இருசக்கர வாகனம் (பைக்) ஒன்றும், இரண்டாவது பரிசாக எல்சிடி டிவியும் வழங்கப்பட உள்ளன. இதைத்தவிர, போட்டியில் பங்கேற்கும் காளைகள், காளையருக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில், மேஜை, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

திருச்சி திருவளர்ச்சோலை பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது ஜல்லிக்கட்டு காளை மீது மற்றொரு காளை வேகமாக முட்டியது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைக்கும் வழியில் இறந்தது. கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் இறந்து விட்டதாக தற்பொழுது தெரிவித்துள்ளனர். மாட்டின் உரிமையாளர், வளர்த்தவர்கள் அதன் மீது படுத்து கதறி அழுது வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *