Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சிறுமியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து பாலியல் துன்புறுத்திய நபர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியானவர் கடந்த 2018-ஆம் ஆண்டு வளநாடு கைகாட்டி பகுதியில் வசித்து வந்த போது, மருங்காபுரி பகுதியில் வசித்து வந்த வெங்கட்ராமன் என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறி பலமுறை வற்புறுத்தியதால், இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், வெங்கட்ராமன் தனது செல் நம்பரை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் கொடுத்து கட்டாயப்படுத்தி மிரட்டி பேசியதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியானவர் வெங்கட்ராமனிடம் தொலைபேசியில் பேசி வந்த நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டாய பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி அதனை வெங்கட்ராமன் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

அதனை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காண்பித்து பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி வெங்கட்ராமனின் மிரட்டலுக்கு பயந்து நீண்ட நாட்களாக யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் இலால்குடி பகுதிக்கு குடிபெயர்ந்ததால், கடந்த (02.09.2021)-ஆம் தேதி மேற்படி வெங்கட்ராமன் பாதிக்கப்பட்ட சிறுமியை மிரட்டி அன்பில் மாரியம்மன் கோவில் முன் வைத்து தாலி கட்டியதுடன், அதனை போட்டோ எடுத்துள்ளான்.

அதனை வைத்துக்கொண்டு தன்னுடன் தொடர்ந்து பாலியல் உறவுக்கு உட்படவேண்டும் இல்லையென்றால் தான் எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த (12.11.2024) ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வீ. வருண் குமார் காவல் உதவி எண் 9487464651-க்கு புகார் அளித்ததின் பேரில் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி வெங்கட்ராமனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *