Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி திருவெறும்பூர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் ஒரு நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் 15 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவெறும்பூர் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் ஒரு நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் உறுப்புக்கல்லூரி பேராசிரியர்களின் நியாயமான  கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் உள்ள அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தின் மாற்றாந்தாய் கேட்டுக்கொள்கிறோம். நீண்ட நாள் அண்ணா பல்கலைக்கழக மாற்றான் தாய் மனப்பான்மையை தவிர்க்கவேண்டும்.

உறுப்புக்கல்லூரிகளில் பணியாற்றும் அனைவருக்கும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி அப்சர்வேஷன் சம்மந்தப்பட்ட இடர்பாடுகளை உடனடியாகத் தீர்த்துவைக்க வேண்டும்:

15 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கும் பதவி உயர்வை அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா பல்கலைக்கழகம் வந்து பேராசிரியர்கள் ஒரு நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய… 

https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *