Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இரு சக்கர வாகனம் வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

கடந்த (14.01.2024)-ந் தேதி கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை பைபாஸ் ரோடு, சஞ்சீவி நகரில் அருகில் ரூ.3,00,000/- மதிப்புடைய விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம், கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி, பணம் ரூ.1200/- மற்றும் இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்தும், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, தீவிர விசாரணை செய்யப்பட்டது.

மேற்படி பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்தது, திருவானைக்கோவில் பகுதியை சேர்ந்த சண்முக முத்துக்குமார் (எ) குமார் மற்றும் 5 நபர்கள் ஒன்று சேர்ந்து, வழிப்பறி செய்ததாக விசாரணையில் தெரியவந்ததால், எதிரிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் சண்முக முத்துக்குமார் (எ) குமார் என்பவர் மீது கேகேநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஜீ-கார்னர், ரஞ்சிதபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனம், மடிகணிணி மற்றும் 2 செல்போன்கள் வழிப்பறி செய்த வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தும், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் ந.காமினி,  மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய திருவானைக்கோவிலை சேர்ந்தசக்திவேல் (எ) சதீஷ் என்பவர் திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆணையின்படி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *