திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காருண்யா நகர் பகுதியில் திருவெறும்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அந்த பகுதியில் சந்தேகபடும்படியாக நின்றுகொண்டு இருந்த திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்த ரவுடி முருகானந்தம் (எ) மூல முருகானந்தம் (28) என்பவரை பிடித்து விசாரித்த பொழுது அவர் அரசு அனுமதியில்லாமல் நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து முருகானந்தத்தை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவனிடமிருந்து நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்தனர். மேலும் அவனிடம் விசாரணை செய்தபோது அவனுக்கு திருவெறும்பூர், பொன்மலை, புதுக்கோட்டை நவல்பட்டு உள்ளிட்ட காவல் நிலையங்கள் பல வழக்குகள் உள்ளதும், பொன்மலை காவல் நிலையத்தில் ரவுடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
பின்னர் திருவெறும்பூர் போலீசார் முருகானந்தத்தை திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments