Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அரசு மருத்துவக்கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்

திருச்சிராப்பள்ளி பெரிமிளகுபாறை பகுதியில் உள்ள வெள்ளையம்மாள் பீடா ஸ்டால் கடையில் (22.04.2022) அன்று முதல் ஆய்வில் அந்த கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது அறிந்து ரூ.5000/- அபராதம் விதிக்கப்பட்டது.

அவர் தொடர்ந்து விற்பனை செய்யது கண்டறியப்பட்டு மீண்டும் அந்த கடையில் (21.06.2022) அன்று ஆய்வில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரூ.10,000/- அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அன்றைய தினத்தன்று அவசர தடையாணை அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக சென்னை, உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேனா 07.07.2022-ன் அவசர தடையாணை உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் அந்த வணிக கடைக்கு சீல் செய்யப்பட்டது. மேலும், மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில்.. திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையியை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளின் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார்.

இதுபோன்று பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்களுக்கும் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா  பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கொடுக்கப்பட்டுள்ள புகார் எண்ணில் தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. புகார் எண் 99 44 95 95 95 / 95 85 95 95 95 மாநில புகார் எண் : 9444042322

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *