Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் அரசு பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து ஆசிரியர் உயிரிழப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 23 வருடங்களாக கணித ஆசிரியராக பாண்டுரங்கன் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்ந பொழுது ஆசிரியர் பாண்டுரங்கன் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனே மாணவர்கள் அருகில் இருந்த சக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த ஆசிரியர்கள் மயங்கி விழுந்த ஆசிரியர் பாண்டுரங்கனை திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதன செய்ததில் இவர் இறந்துவிட்டார் என்றும், மாரடைப்பு காரணமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து ஆசிரிய பாண்டுரங்கன் உயிரிழந்த தகவலை அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு சக ஆசிரியர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அமரர் ஊர்தி மூலம் அவரது சொந்த ஊரான விருதாச்சலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு கணித ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *