Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஐந்து பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட வாலிபர்

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி மகன் விஷ்ணு. இவர் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இன்று காலை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாபோது திண்டுக்கரை என்று இடத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் விஷ்ணுவை  சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுக்குறித்து தகவலறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஷ்ணுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜீயபுரம் போலீசார் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்றவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *