Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அருகே வாலிபரை காரில் கடத்தி நகைகள் பறிப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஒக்கரை கிருஷ்ணாபுரத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதற்காக பல்வேறு ஊர்களில் உள்ள சொந்தக்காரர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அதில் ஒருவர் முசிறி தாலுக்கா வாழவந்தி கிராமத்தை சேர்ந்த பிச்சை – ஜெயமணி இவரது மகன் அஜித்குமார் திருமணமாகி ஓராண்டுகள் ஆகிறது.

திருவிழாவிற்க்கு வந்த அஜித்குமார் இரவு உணவு அருந்திவிட்டு உடல் உபாதைகளை கழிப்பதற்காக ஒதுக்குப்புறமாக வெளியே சென்றுள்ளார். அப்போது தனது பெரியம்மாவுடன் செல்போனில் பேசிக்கொண்டே சென்ற போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் அஜித் குமாரின் வாயைத் மூடி உள்ளனர். இதனால் இவர் அலறல் சத்தம் எதிர்முனையில் உள்ள பெரியம்மாவிற்கு கேட்டுள்ளது பின்னர் மயக்க மருந்து தெளித்து காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த அவரது பெற்றோர் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் இரவில் புகார் அளிக்க சென்ற பொழுது புகாரை வாங்க மறுத்ததாகவும், காவல்துறையில் அலட்சியமாக பதில் கூறியதாக தெரிவிக்கின்றனர். அஜித் குமார் அணிந்திருந்த இரண்டு சவரன் செயின் மற்றும் மோதிரம் ஆகிய நகைகளை பறித்துக் கொண்டு அவரை அடித்து துன்புறுத்தியதாக பெற்றோர் தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *