Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

குடும்ப பிரச்சனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் குடும்ப பிரச்சினை காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.போலீசார் விசாரணை.

 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி 24 வயதான நந்தினி. இவர்கள் இருவரும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.அய்யப்பனுக்கு மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த நந்தினி வீட்டில் தூக்கிட்டு கொண்டார்.

இதை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் இச்சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *