Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 122 பேருக்கு தொற்று உறுதி – ஒருவர் உயிரிழப்பு!

தமிழகத்தில் தற்போது நோய்தொற்று மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து நாள்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

Advertisement

தமிழக அரசு சார்பில் முகக் கவசங்கள் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினாலும் விபரீதம் தெரியாமல் பொதுமக்கள் இன்றளவும் தகுந்த பாதுகாப்போடு நடமாடுவது இல்லை.

Advertisement

தமிழகத்தில் இன்று 3,290 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகம் முழுவதும் 8,92,780 பேர் பாதிப்படைந்துள்ளனர். கொரோனா தொற்றால் இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 

Advertisement

இந்நிலையில் திருச்சியில் இன்று 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் கொரோனா சிகிச்சை பெற்ற ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில் திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் இனிமேலும் பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லை என்றால் வருகின்ற காலங்களில் நோய்த்தொற்று கணிசமாக கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *