Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

விபத்து: ரூ.5லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்களுடன் லாரி எரிந்து நாசம்

மணப்பாறை அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ரூ 5 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து நாசமானது.

சிவகாசியிலிருந்து நேற்று இரவு ஈச்சர் வாகனத்தில் தீப் பெட்டி பண்டல் ஏற்றிக்கொண்டு ஒரிசாவை சேர்ந்த விமலேந்திர குமார் 60 ஒட்டுனர் மற்றும் கிளினர் ஆகிய இருவரும் ஒரிசா மாநிலம் கட்டாக்கிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த முக்கன்பாலம் அருகில் வரும் பொழுது லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்ததில் தீப்பெட்டி பண்டல்கள் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. உடனடியாக லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் வண்டி முழுவதும் தீக்கிரையானது.

சம்பவ இடத்தில் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி கட்டுக்குள் தீயை கொண்டு வந்தனர். மேலும் சிதறி கிடந்த தீப்பெட்டி பண்டல்கள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன. சிதறிக் கிடந்த தீப்பெட்டிகளை சுற்றியுள்ள பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.விபத்துக்குள்ளான லாரியில் ரூ 5 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து நாசமாகின.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *