Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அருகே விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலி, குழந்தை உட்பட்ட 3 பேர் படுகாயம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அன்னபூர்ணா நகரைச் சேர்ந்த அர்ஜுனன் (63). இவருடைய மனைவி மலர்விழி (50), மகன் விஷ்ணு (30), மகள் மோனிஷா (28), பேரன் தவசி (04) ஆகியோருடன் சொந்த காரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் திருச்சி நோக்கி வந்துள்ளனர்.

அப்போது மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மணப்பாறை அருகே முக்கன் பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையின் ஓரம் இருந்த மரத்தில் சென்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஒட்டி வந்த அர்ஜுனன் மற்றும் அவரது மனைவி மலர்விழி ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட மகள் மோனிஷா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மகன் விஷ்ணு மற்றும் பேரன் தவசி ஆகிய இருவரும் மேல்சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *