Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மாமர இலைகளில் 1330 குறள் எழுதி திருச்சி ஆசிரியை சாதனை

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கோடியம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணிபுரிபவர் அமுதா. இவர் புதுச்சேரியில் நடைபெற்ற உலக சாதனையாளர்கள் போட்டியில் பங்கேற்று 1330 திருக்குறளை 20 மணி நேரத்தில் 30 மாமர இலைகளில் எழுதி சாதனை படைத்துள்ளார். இவருக்கு புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர் வெங்கடேசன் சான்றிதழ் வழங்கினார்.

சிறுவயது முதலே திருக்குறள் மீது தமிழ் மீதும் உள்ள பற்று காரணமாக பல்வேறு போட்டியில் கலந்துகொண்டு திருக்குறளை எழுதியும், வாசித்து வருகிறார். திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பு, அருந்தமிழ் அரியணை தமிழ் குழுமம், திருச்சி செம்மொழி மன்றம் உள்ளிட்ட பல்வேறு திருக்குறள் உலக சாதனையாளர் சங்கத்தினர் நடத்திய போட்டிகளில் பங்குபெற்று பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளார்.

1330 திருக்குறளை மாமரத்தின் தளிர் இலைகளை எழுதி சாதனை படைத்த ஆசிரியருக்கு தொட்டியம் பகுதி சேர்ந்த பல்வேறு அமைப்பினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *